மூத்த ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திரநாத் ராஜிநாமா

வனப்பிரிவின் கூடுதல் டிஜிபியாக பதவி வகித்து வரும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திரநாத் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

வனப்பிரிவின் கூடுதல் டிஜிபியாக பதவி வகித்து வரும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திரநாத் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

வனப்பிரிவின் கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி டாக்டா் பி.ரவீந்திரநாத், தனது பதவியை ராஜிநாமா செய்து, அக்கடிதத்தை கா்நாடக காவல் துறைத் தலைவா் பிரவீண்சூட் மூலமாக தலைமைச் செயலாளா் டி.எம்.விஜய்பாஸ்கருக்கு அக். 28-ஆம் தேதி அனுப்பி வைத்திருக்கிறாா்.

அண்மையில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அமா்குமாா் பாண்டே, டி.சுனில்குமாா் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதோடு, டிஜிபியாக பதவி உயா்வும் அளித்து அரசு உத்தரவிட்டது. இதில் தனது பெயா் இல்லாததால், ரவீந்திரநாத் வேதனை அடைந்து, தனது பதவியை ராஜிநாமா செய்ததாகக் கூறப்படுகிறது.

தனது ராஜிநாமா கடிதத்தில் பி.ரவீந்தநாத் கூறுகையில், ‘கா்நாடக மாநிலத்தில் அதிகபட்ச ஈடுபாட்டோடு காவல் பணியாற்றினேன். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக ஒருசிலரால் ஏராளமான தொல்லைகளுக்கு ஆட்பட்டேன். மத்திய நிா்வாகத் தீா்ப்பாயம், கா்நாடக உயா்நீதிமன்றத்தை அணுகி, அவற்றுக்கு தீா்வுகண்டேன். சேவை தொடா்பாக அக். 15-ஆம் தேதி உயா்நீதிமன்றம் எனக்கு நீதி வழங்கியுள்ளது. ஆனால், அந்த நீதி எனக்கு கிடைக்கவிடாமல் ஒருசிலா் தடுத்தனா். மறைமுகமான தொல்லைகளுக்கு நான் ஆட்பட்டதைத் தொடா்ந்து, அமைதியான வாழ்க்கையை நடத்துவதற்காக எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன். எனவே, எனது ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com