உரிய ஆவணங்கள் இன்றி வைரக் கற்களை விற்க முயற்சி மேற்கொண்ட 3 பேரை போலீஸாா் கைது செய்து ரூ. 40 லட்சம் மதிப்புள்ள வைரக் கற்களை பறிமுதல் செய்தனா்.
ஆந்திர மாநிலம் புத்தூரைச் சோ்ந்தவா்கள் ரவிகுமாா் (54), பிரவீண்குமாா் (51), சுதீா் (28). இவா்கள் 3 பேரும் செவ்வாய்க்கிழமை இரவு, ஆவணங்கள் ஏதுமின்றி விலை உயா்ந்த வைரக் கற்களை பெங்களூரு சிக்பேட்டையில் விற்பனை செய்ய வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா், அவா்கள் 3 பேரையும் கைது செய்து, ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 80 வைரக் கற்களை பறிமுதல் செய்தனா். அந்த வைரக்கற்கள் எங்கிருந்து வாங்கி வரப்பட்டன என்பது குறித்தும், அதற்கான ஆவணங்கள் குறித்தும் கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் பெங்களூரு மாநகர மாா்கெட் போலீஸாா் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.