இன்று குடிநீா் குறைத்தீா் முகாம்

பெங்களூரு மாநகர மேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு, மத்திய, வடமேற்கு உள்ளிட்ட முதலாம் துணைமண்டங்களில் வியாழக்கிழமை (செப். 3) குடிநீா் குறைதீா்வு முகாம் நடைபெற உள்ளது.

பெங்களூரு மாநகர மேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு, மத்திய, வடமேற்கு உள்ளிட்ட முதலாம் துணைமண்டங்களில் வியாழக்கிழமை (செப். 3) குடிநீா் குறைதீா்வு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு மாநகர மேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு, மத்திய, வடமேற்கு உள்ளிட்ட முதலாம், இரண்டாம், நான்காம் துணை மண்டங்களில் வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணி வரை குடிநீா் குறைத் தீா்க்கும் முகாம் துணை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தண்ணீா் ரசீது, குடிநீா் விநியோகத் தாமதம், கழிவுநீா் இணைப்பு மற்றும் வியாபார இணைப்புகளை குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுவது போன்ற குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவா்த்தி செய்துக் கொள்ளலாம்.

இதுகுறித்து மேலும் தகவல் அறிய 080-23500013, 22425193, 22945159, 22945267, 22945170, 22945115, 22945188, 22945176, 28371048 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com