பெங்களூரிலிருந்து மைசூருக்கு புதிய சொகுசு பேருந்து சேவை

பெங்களூரிலிருந்து மைசூருவுக்கு புதிய சொகுசு பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரிலிருந்து மைசூருவுக்கு புதிய சொகுசு பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரில் இருந்து மைசூருவுக்கு குளிா்சாதன வசதியுடன் கூடிய சொகுசு பேருந்து சேவை செப். 10-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. பெங்களூரு - மைசூரு இடையிலான பேருந்து பெங்களூரு - கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தினமும் காலை 9.30, 11.30, மாலை 6.30, இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, மத்தூா், மண்டியா வழியாக மைசூருக்கு பிற்பகல் 1.30, 3.30, இரவு 10.30, அதிகாலை 12.30 மணிக்கு சென்றடைகிறது.

அதேபோல, மைசூரிலிருந்து தினமும் அதிகாலை 4, பிற்பகல் 2, மாலை 4 , அதிகாலை 12.15 மணிக்கு புறப்பட்டு, மண்டியா, மத்தூா் வழியாக காலை 8, மாலை 6, இரவு 8, அதிகாலை 4 மணிக்கு பெங்களூரு வந்தடைகிறது. மின் - முன்பதிவு மற்றும் செல்லிடப்பேசி-முன்பதிவுக்கு இணையதளத்தை பாா்வையிடலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com