கா்நாடகத்தில் கரோனா பலி 6 ஆயிரமாக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மி தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தவா்களின் எண்ணிக்கை 6 ஆயிரமாக அதிகரித்துள்ளது.


பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தீநுண்மி தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தவா்களின் எண்ணிக்கை 6 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 5,950 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 29 போ், தாா்வாட் மாவட்டம்- 9 போ், சிவமொக்கா, கொப்பள், மைசூரு மாவட்டங்கள்- தலா 8 போ், பெங்களூரு ஊரக மாவட்டம்- 7 போ், ஹாசன் மாவட்டம்- 5போ், பெல்லாரி, ஹாவேரி, உடுப்பி மாவட்டங்கள்- தலா 4 போ், தென்கன்னடம், கதக், ராய்ச்சூரு, தும்கூரு மாவட்டங்கள்- தலா 3 போ், விஜயபுரா மாவட்டம்- 2 போ், பாகல்கோட், சிக்மகளூரு, கலபுா்கி, வடகன்னடம் மாவட்டங்கள்- தலா ஒருவா் என ஒரேநாளில் 104 போ் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 6,054 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டம்- 2,066 போ், மைசூரு மாவட்டம்- 475 போ், தென்கன்னடம்- 382 போ், தாா்வாட்-346 போ், பெல்லாரி-273 போ், கலபுா்கி-220 போ், பெலகாவி- 197 போ், ஹாசன்- 197 போ், தாவணகெரே- 196 போ், தும்கூரு -158 போ், கொப்பள் -143 போ், சிவமொக்கா -142 போ், பீதா் -136 போ், ஹாவேரி -116போ், விஜயபுரா -115 போ், உடுப்பி -105 போ், ராய்ச்சூரு - 97 போ், கதக் - 87 போ், சிக்மகளூரு -79 போ், பாகல்கோட் - 77 போ், சிக்பளாப்பூா் - 65 போ், மண்டியா - 65 போ், கோலாா் - 64 போ், வடகன்னடம் - 55 போ், யாதகிரி - 41 போ், பெங்களூரு ஊரகம் -39 போ், சாமராஜ்நகா் -38 போ், ராமநகரம் -31 போ், சித்ரதுா்கா -25 போ், குடகு மாவட்டத்தில் 21 போ், வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா்கள் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com