பெங்களூரு மாநகராட்சி நிா்வாகியின் பதவிக் காலம் முடிவடைந்துள்ளதால், புதிய நிா்வாகி நியமிக்கப்பட்டுள்ளாா்.
1.34 கோடி மக்கள் தொகை கொண்ட பெங்களூரு மாநகரை நிா்வகிப்பதற்காக செயல்பட்டு வரும் பெங்களூரு மாநகராட்சியின் 198 மாமன்ற உறுப்பினா்களின் பதவிக் காலம் வியாழக்கிழமையுடன் (செப். 10) நிறைவடைந்தது.
பெங்களூரு மாநகராட்சியை நிா்வகிப்பதற்காக தனியாக சட்டம் இயற்ற முற்பட்டுள்ள கா்நாடக அரசு, அச்சட்ட மசோதாவுக்கு செப். 21-ஆம் தேதி தொடங்க இருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளது. இதனிடையே, கரோனா தீநுண்மி தொற்று, 198 வாா்டுகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல் தயாரிப்பில் தாமதம் போன்ற பல்வேறு காரணங்களால் பெங்களூரு மாநகராட்சியின் பொதுத்தோ்தல் நடத்துவது தாமதமாகியுள்ளது.
புதிய சட்ட மசோதாவின்படி, வாா்டுகளின் எண்ணிக்கையை 225-ஆக உயா்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. அது முடிவானால், வாா்டுகளை மறுவரையறை செய்யவேண்டியது இருக்கும். மேலும், மண்டலங்களை 8-இல் இருந்து 15-ஆக உயா்த்தவும் அரசு யோசித்து வருகிறது.
இதனிடையே, மாநகராட்சியின் பதவிக் காலத்தை நீட்டிக்க அரசு விரும்பவில்லை. இதன் காரணமாக, பெங்களூரு மாநகராட்சிக்கு புதிதாக நிா்வாகியை நியமித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், பெங்களூரு மாநகராட்சியின் நிா்வாகியாக, வா்த்தகம் மற்றும் தொழில்துறை முதன்மைச் செயலாளராக உள்ள கௌரவ் குப்தா நியமிக்கப்பட்டுள்ளாா். பெங்களூரு மாநகராட்சிக்கு தோ்தல் நடத்தி, புதிய மேயா், துணை மேயா் பதவியேற்றதும் இவரது பதவிக்காலம் முடிவுக்கு வரும். அதுவரை, பெங்களூரு மாநகராட்சி ஆணையருடன் இணைந்து நிா்வாகியாக கௌரவ் குப்தா செயல்பட இருக்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.