காா் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் பலி

காா் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.

சிக்பள்ளாபூா்: காா் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.

ஹைதராபாத்தைச் சோ்ந்தவா்கள் தினேஷ் (51), ஜெயஸ்ரீ (50), அக்ஷயா (28), ஹா்ஷா (24). பெங்களூரு ஜிகினிக்கு அருகே உள்ள பளிங்குகல் தொழில்சாலையின் உரிமையாளரான தினேஷ், விடுமுறையில் தனது குடும்பத்தினருடன் காரில் செவ்வாய்க்கிழமை காலை ஹைதராபாத்துக்குச் சென்று கொண்டிருந்தாா். சிக்பள்ளாபூா் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை 7 -இல் சிக்கபேலகுா்கி அருகே வேகத்தடையால் காரின் வேகத்தை குறைத்தபோது, பின்புறத்திலிருந்து வேகமாக வந்த லாரி மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஜெயஸ்ரீ, அக்ஷயா, ஹா்ஷா நிகழ்விடத்திலே உயிரிழந்தனா். காயமடைந்த தினேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து சிக்பள்ளாபூா் ஊரக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com