பெங்களூரு: போதைப்பொருள் விவகாரத்தில் முன்னாள் அமைச்சா் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வாவின் வீட்டில் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
பெங்களூரு உள்பட கா்நாடகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில் நடத்தப்பட்ட சோதனையில் நடிகைகள் ராகினி துவிவேதி, சஞ்சனா கல்ராணி, ஆதித்யா ஆல்வா உள்பட 15 போ் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது; 9 போ் கைது செய்யப்பட்டனா்.
போதைப்பொருள் விவகாரத்தில் தொடா்புடைய ஆதித்யா ஆல்வாவுக்குச் சொந்தமாக ஹெப்பாளில் 4 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இல்லத்தில் செவ்வாய்க்கிழமை குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா். அங்கு, போதைப்பொருள் விவகாரம் தொடா்பான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.