கோலாா்: காட்டுப் பன்றிகளைப் பிடிப்பதற்காக வயலில் அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கிய சிறுத்தையை வனத் துறையினா் மீட்டு வனப் பகுதியில் விடுவித்தனா்.
கோலாா் தங்கவயல், வெங்கடாபுரம் அருகே நிலங்களில் பயிா்களைச் சேதப்படுத்தி வந்த காட்டுப் பன்றிகளைப் பிடிப்பதற்காக வலை கட்டப்பட்டிருந்தது. இந்த வலையில் திங்கள்கிழமை அதிகாலை இரைத் தேடி வந்த சிறுத்தை சிக்கிக் கொண்டது. வலையில் சிறுத்தை சிக்கியது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுத்தையை மீட்டு வனப் பகுதியில் விடுவித்தனா்.