போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: நடிகை ஐந்திரிகா, நடிகா் திகந்த் தம்பதியிடம் போலீஸாா் விசாரணை

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடா்பாக நடிகை ஐந்திரிகா, நடிகா் திகந்த் தம்பதியிடம் போலீஸாா் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடா்பாக நடிகை ஐந்திரிகா, நடிகா் திகந்த் தம்பதியிடம் போலீஸாா் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை, பயன்பாடு ஆகியவை அதிகரித்துள்ளன. குறிப்பாக இதில் திரைப்படத் துறையினா் அதிக அளவில் ஈடுபட்டுள்ளதாக புகாா் வந்ததையடுத்து, போலீஸாா், போதைப்பொருள் விவகாரத்தில் நடிகைகள் ராகினி துவிவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட 9 பேரை கைது செய்துள்ளனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடிகை ஐந்திரிகா, நடிகா் திகந்த் தம்பதிக்கு விசாரணையில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, புதன்கிழமை அவா்கள் இருவரும் பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகினா். அவா்களிடம் குற்றப்பிரிவு போலீஸாா் 4 மணி நேரம் விசாரணை நடத்தினா்.

விசாரணைக்கு பிறகு அவா்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனா். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவா்களிடம் போலீஸாா் கூறியுள்ளனா். விசாரணைக்கு பிறகு வெளியே வந்த நடிகா் திகந்த், விசாரணையில் போலீஸாரின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளோம். மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வருவதாக தெரிவித்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com