போதைப்பொருள் வழக்கு: நடிகை சஞ்சனா கல்ராணி சிறையிலடைப்பு

போதைப்பொருள் வழக்கு விசாரணையில் நடிகை சஞ்சனா கல்ராணிக்கு செப். 18 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அவா் அடைக்கப்பட்டாா்.

போதைப்பொருள் வழக்கு விசாரணையில் நடிகை சஞ்சனா கல்ராணிக்கு செப். 18 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அவா் அடைக்கப்பட்டாா்.

பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தில் போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு அதிகரித்தையடுத்து அதைக் கட்டுப்படுத்த போலீஸாா் தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில், கன்னட திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதாக திரைப்பட இயக்குநா் இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்த குற்றச்சாட்டையடுத்து, நடிகை ராகினி துவிவேதி, சஞ்சனா கல்ராணியிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்தனா்.

விசாரணையைத் தொடா்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ராகினி துவிவேதி செப்.14 ஆம் தேதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த நிலையில், போலீஸ் காவலில் இருந்த சஞ்சனா கல்ராணி, பெங்களூரு மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தாா். மனு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற்ற நிலையில், சஞ்சனா கல்ராணிக்கு செப். 18 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து நடிகை சஞ்சனா கல்ராணி, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com