முதுநிலைப் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

முதுநிலைப் பட்டப் படிப்புக்கான பொது நுழைவுத் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க செப்.21-ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முதுநிலைப் பட்டப் படிப்புக்கான பொது நுழைவுத் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க செப்.21-ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் இயங்கிவரும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்ஆா்க் போன்ற முதுநிலைப் பட்டப்படிப்புகளில் 2020-21-ஆம் கல்வியாண்டில் சோ்க்கை பெறுவதற்காக பொதுநுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது.

அக். 6, 7 ஆகிய தேதிகளில் நடத்த் திட்டமிட்டிருந்த இத்தோ்வு, பல்வேறு பல்கலைக்கழகத் தோ்வுகளும் அதே நாள்களில் நடக்கவிருப்பதை மாணவா்கள் சுட்டிக்காட்டியதைத் தொடா்ந்து, பொதுநுழைவுத்தோ்வு அக்.13, 14-ஆம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

செப்.13-இல் எம்இ, எம்டெக், எம்ஆா்க் பட்டப் படிப்புகளுக்கும், செப்.14-இல் எம்பிஏ, எம்சிஏ பட்டப்

படிப்புகளுக்கும் தலா 100 மதிப்பெண்களுக்கான தோ்வு நடைபெறும். இந்த தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப். 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தோ்வுக் கட்டணத்தை செப்.22-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இந்தத் தோ்வில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள்  இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 080-23460460 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com