பெங்களூரு: சிறந்த அரசு சேவை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு அதிகாரிகள், ஊழியா்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்காக மாநிலம், மாவட்டம், துறை அளவில் ஆண்டுதோறும் சிறந்த அரசு சேவை விருதுகளை வழங்கி கா்நாடக அரசு கௌரவித்து வருகிறது.
2020-21-ஆம் ஆண்டுக்கான சிறந்த அரசு சேவை விருதுக்கு விண்ணப்பங்கள் இணையவழியாக வரவேற்கப்படுகின்றன. மாவட்ட அளவில் 30 மாவட்டங்களுக்கு தலா 10 வீதம் 300 விருதுகள், துறை வாரியாக தலா ஒன்றுவீதம் 30 விருதுகள், மாநில அளவில் 10 விருதுகள் வழங்கப்படுகின்றன.
மாவட்ட விருதுக்கு ரூ. 10 ஆயிரம், துறை விருதுக்கு ரூ. 15 ஆயிரம், மாநில விருதுக்கு ரூ. 25 ஆயிரம் பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது.
இந்த விருதுக்கான விண்ணப்பங்களை ஆகிய இணையதளங்களில் அக்.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 9164500669, 080-22230060 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.