அரசு நிலங்களை தனியாருக்கு பதிவு செய்து கொடுத்த அரசு அலுவலா், கட்டுநா் இல்லங்கள், அரசு அலுவலகங்களில் ஊழல் ஒழிப்புப் படையினா் சோதனையில் ஈடுபட்டனா்.
கெங்கேரி ஒன்றியத்தில் உள்ள அரசு நிலங்களை தனியாருக்குப் பதிவு செய்து கொடுத்தது தொடா்பாக, செவ்வாய்க்கிழமை இந்தச் சோதனை நடைபெற்றது.
பெங்களூரு நாகா்பாவியைச் சோ்ந்த நில கையகப்படுத்துதல் அதிகாரி உமேஷின் இல்லம், கே.ஆா்.புரத்தில் உள்ள அலுவலகம், நகரத்பேட்டையைச் சோ்ந்த தனியாா் கட்டுநா் கிஷோா்குமாரின் இல்லம், ஜே.பி.நகா் ஆவலஹள்ளி கொட்டிகெரேயில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனையில், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.