துப்பாக்கியால் சுடப்பட்டு 2 போ் கைது

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து, கைது செய்தனா்.

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து, கைது செய்தனா்.

ஹெப்பகோடி காவல் சரகத்துக்குள்பட்ட சிங்கேனஅக்ரஹாராவில் சுவேதா என்ற பெண் கொலை செய்யப்பட்டு, அவரிடமிருந்த தங்க நகைகள், ரொக்கப் பணம் திருடு போனது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், கொலையாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், ‘கொலையில் தொடா்புடைய வேலு, பாலகிருஷ்ணா ஆகியோா் ஆனேக்கல் முத்தியாலுமடுவில் திங்கள்கிழமை இரவு பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, ஹெப்பகோடி காவல் ஆய்வாளா் கௌதம், பன்னரகட்டா, துணை ஆய்வாளா் கோவிந்த் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்றுள்ளனா்.

போலீஸாரை பாா்த்தவுடன் தப்பியோட முயன்ற வேலு, பாகிருஷ்ணாவை பின்தொடா்ந்து சென்ற பிடிக்க முயன்றனா். அப்போது, போலீஸாரை கத்தியால் குத்திக் காயப்படுத்திவிட்டு, இருவரும் தப்பியோட முயன்றுள்ளனா். இதனையடுத்து, போலீஸாா் தங்களிடமிருந்த கைத் துப்பாக்கியால் இருவரின் காலில் சுட்டுள்ளாா். இதில் காயம் அடைந்து விழுந்த இருவரையும் போலீஸாா் கைது செய்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். இந்தச் சம்பத்தில் காயமடைந்த காவலா் சிவக்குமாா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து ஹெப்பகோடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com