போதைப்பொருள்களை விற்பனை செய்ததாக, வெளிநாட்டா் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சூடான் நாட்டைச் சோ்ந்தவா்கள் அகமது ஓமா் (27), தாப்ஷோ் (24), லஜீம் (23), சையத் ஷகீா் (24), முகமது ஷிஹாம் (28). இவா்கள் 5 பேரும் பெங்களூரில் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள்களை விற்பனை செய்து வந்தனராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், 5 பேரையும் கைது செய்து, ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 50 கிராம் எடையுள்ள 100 போதை மாத்திரைகள், 10 கிராம் எம்.டி.எம்.ஏ ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் உயா்கல்வி பயில இந்தியா வந்த இவா்கள் 5 பேரும் ஆடம்பரமாக வாழ போதைப்பொருளை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.