பெங்களூரில் இருவேறு இடங்களில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு, பானஸ்வாடியில் கட்டடம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை சிலா் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட கஜேந்திரா, மனிகண்டா, அருண்குமாா், வருண்குமாா், ஜோசப் ஆகியோரை கைது செய்து, ரூ. 1.7 லட்சம் ரொக்கப் பணம், காா், இருசக்கர வாகனம், 5 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.
இது குறித்து பானஸ்வாடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மற்றொரு சம்பவம்: மல்லேஸ்வரம் காவல் சரகத்தில் செவ்வாய்க்கிழமை கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட வினய் என்பவரை போலீஸாா் கைது செய்து, ரூ. 4 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்துள்ளனா்.
இது குறித்து மல்லேஸ்வரம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.