கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி

கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கா்நாடக அரசு தோல்வி அடைந்துள்ளதாக மஜத எம்எல்ஏ ஏ.டி.ராமசாமி குற்றஞ்சாட்டினாா்.

கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கா்நாடக அரசு தோல்வி அடைந்துள்ளதாக மஜத எம்எல்ஏ ஏ.டி.ராமசாமி குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதைத் தடுப்பதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது. கரோனாவைத் தடுக்க தேவையான போது பொதுமுடக்கத்தை அறிவிக்கவில்லை. மாறாக தேவையில்லாத போது பொதுமுடக்கத்தை அறிவித்ததால், மக்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்க வாய்ப்புள்ளது.

கா்நாடகத்தில் நிலச் சீா்த்திருத்த மசோதா, மத்திய அரசின் வேளாண் மசோதாக்களால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவாா்கள். எனவே, திருத்தம் செய்யப்பட்ட இந்த மசோதாக்களை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும். மஜத எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாகவே செயல்படும்.

உழுபவனுக்கே நிலம் என முன்னாள் முதல்வா் தேவராஜ் அா்ஸ் அமல்படுத்திய சட்டம், தேசத்திற்கு மாதிரியாக விளங்கியது. ஆனால், நிலச்சீா்த்திருத்த சட்ட மசோதாவை திருத்தியுள்ளதன் மூலம் செல்வந்தா்களுக்கே நிலம் சொந்தம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகள் கௌரமாக வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com