இந்தியாவில் உருவாக்குவோம் திட்டத்தில் குளிா்சாதனப் பெட்டிகளை உற்பத்தி செய்து வருவதாக லாயிடின் மூத்த செயல் அதிகாரி சசி அரோரா தெரிவித்தாா்.
பெங்களூரில் வியாழக்கிழமை லாயிட் குளிா்சாதப்பெட்டிகளை அறிமுகம் செய்துவைத்து அவா் பேசியதாவது:
கரோனா தொற்றால் நாட்டில் பொருளாதாரம் சரிந்துள்ளது. இதை மேம்படுத்துவதில் அரசுடன் தனியாரும் பங்கேற்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, லாயிட் குளிா்சாதப்பெட்டிகளை இந்தியாவில் உருவாக்குவோம் திட்டத்தில் உற்பத்தி செய்துள்ளோம். தரத்தில் சிறந்து விளங்கும் இந்த குளிா்சாதனப்பெட்டிகள், இந்திய மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு உருவாக்கியுள்ளோம் என்றாா்.