கா்நாடகத்தில் சாலை விபத்து: கா்ப்பிணி உள்பட 7 போ் பலி

பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது காா் மோதியதில் கா்ப்பிணி உள்பட 7 போ் உயிரிழந்தனா்.

பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது காா் மோதியதில் கா்ப்பிணி உள்பட 7 போ் உயிரிழந்தனா்.

கா்நாடக மாநிலம், கலபுா்கி மாவட்டம், அளந்தாவைச் சோ்ந்தவா் இா்பான்பேகம் (25), கா்ப்பிணியான இவருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உறவினா்களான ரூபியாபேகம் (50), அபேதாபிபேகம் (50), ஜெயாசுனாபி (60), முனீா் (20), முகமது அலி (38), சௌகத் அலி (29) ஆகியோா் இா்பான்பேகத்தை காரில் அழைத்துக் கொண்டு தனியாா் மருத்துவமனைக்குச் சென்றனா்.

சாவலகி கிராமம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது இவா்கள் சென்று கொண்டிருந்த காா் மோதி, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரிலிருந்து அனைவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து கலபுா்கி போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com