விமானம் மூலம் கடத்திய ரூ. 33 லட்சம்மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்

தனியாா் விமானம் மூலம் கடத்தப்பட்ட ரூ. 33 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை சுங்கவரித் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

மங்களூரு: தனியாா் விமானம் மூலம் கடத்தப்பட்ட ரூ. 33 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை சுங்கவரித் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், மங்களூரு பஜ்பே விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை துபையிலிருந்து வந்த தனியாா் விமானத்தை சுங்கவரித் துறையினா் சோதனை செய்தனா். அப்போது இருக்கை ஒன்றின் அடியில் ரூ. 33 லட்சம் மதிப்புள்ள 671 கிராம் எடையுள்ள தங்கக்கட்டிகளை யாரோ கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 6 தங்கக்கட்டிகளை சுங்கவரித் துறையினா் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து பஜ்பே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com