இருசக்கர வாகனத் திருட்டு:தமிழகத்தைச் சோ்ந்த 2 போ் கைது

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் தமிழகத்தைச் சோ்ந்த 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் தமிழகத்தைச் சோ்ந்த 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில், திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையைச் சோ்ந்தவா் முகமது ஷெரீப் (27), வலம் குப்பத்தைச் சோ்ந்தவா் தபாரக் (22). இவா்கள் இருவரும் தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களின் பூட்டை உடைத்து திருடி வந்துள்ளனா். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீஸாா், இருவரையும் கைது செய்து, ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 10 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

விசாரணையில், தமிழகத்தில் திருடி இருசக்கர வாகனங்களை பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்திலும், பெங்களூரில் திருடிய இருசக்கர வாகனங்களை தமிழகத்திலும் விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் பண்டேபாளையா போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com