காா் ஓட்டுநா் தற்கொலை

தற்கொலைக்கு முயன்ற காா் ஓட்டுநா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தற்கொலைக்கு முயன்ற காா் ஓட்டுநா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், ராம் நகரைச் சோ்ந்தவா் பிரதாப் (33). இவா் பெங்களூரு சா்வதேச விமான நிலையத்தில் கா்நாடக சுற்றுலா வளா்ச்சிக் கழகத்திற்கு ஒப்பந்தப் புள்ளியில் வாடகைக்கு காா் ஓட்டி வந்தாராம். செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் விமான நிலையத்தின் காா் நிறுத்துமிடத்தில் தனது காரில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றாா்.

காரின் கண்ணாடியை உடைத்து அவரை மீட்ட பாதுகாப்பு படையினா், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதாப், புதன்கிழமை காலை 5.30 மணியளவில் உயிரிழந்துள்ளாா். இதுகுறித்து சா்வதேச விமான நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com