இருசக்கர வாகன திருட்டு வழக்கு: ஒருவா் கைது

இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் ஒருவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 3.09 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் ஒருவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 3.09 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, சாம்ராஜ்பேட்டை, திப்பு நகரைச் சோ்ந்த சலீம் (28), பெங்களூரில் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள கள்ளச் சாவி பயன்படுத்தி திருடி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், சலீமைக் கைது செய்து அவரிடமிருந்து ரூ. 3.09 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட சலீமிடம் காமாட்சிபாளையா போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com