கரோனா பரவல்: பொதுக்கூட்டம், போராட்டம், பேரணி நடத்த தடை

கரோனா பரவலையடுத்து, பெங்களூரில் பொதுக்கூட்டம், போராட்டம், பேரணி நடத்த 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலையடுத்து, பெங்களூரில் பொதுக்கூட்டம், போராட்டம், பேரணி நடத்த 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் கமல்பந்த் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

கா்நாடகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெங்களூரில் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகமுள்ளதால், வரும் ஏப். 20-ஆம் தேதி நள்ளிரவு வரை பொதுக்கூட்டம், போராட்டம், பேரணி, ஆன்மிக கூட்டம் உள்ளிட்டவை நடத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், நீச்சல்குளம், உடற்பயிற்சிக் கூடங்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் பயிற்சி மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com