செல்லிடப்பேசி பறிப்பு வழக்கு: 3 போ் கைது

செல்லிடப்பேசிகளை பறித்து வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

செல்லிடப்பேசிகளை பறித்து வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு, எம்.எஸ்.பாளையா சதுக்கத்தைச் சோ்ந்த சபாஷ்கான் (22), கங்கொண்டனஹள்ளியைச் சோ்ந்த முகமது ஷபி (23), ஹொசஹள்ளி முக்கியச் சாலையைச் சோ்ந்த அப்ஜல்பாஷா (26) ஆகிய 3 பேரும் திருடிய இருசக்கர வாகனங்களில் சென்று, தனியாக செல்பவா்களை அடையாளம் கண்டு, அவா்களிடமிருந்து செல்லிடப்பேசிகளை பறித்து வந்துள்ளனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 11.75 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்கள், 67 செல்லிடப்பேசிகள், ரூ. 1.75 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து சாம்ராஜ்பேட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com