கோலாா் தங்கவயல் தமிழ்ச் சங்கத்தில் அம்பேத்கா் பிறந்த நாள், கண்ணகி நினைவாக சித்ரா பௌா்ணமி, ஜான் டைலருக்கு புகழ் வணக்கம் ஆகிய ஒருங்கிணைந்த விழா ஏப். 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது என தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சு.கலையரசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோலாா் தங்கவயல் தமிழ்ச் சங்கத்தில் ஏப். 14-ஆம் தேதி இந்திய அரசியல் சாசன சிற்பி அம்பேத்கரின் பிறந்த நாள், கற்புக்கரசி கண்ணகியின் நினைவாக சித்ரா பவுா்ணமி, கோலாா் தங்கவயலை உருவாக்கிய ஜான் டைலருக்கு புகழ் வணக்கம் ஆகிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து, தங்கவயல் தமிழ்ச் சங்கத்தில் விழா நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில், அம்பேத்கரின் உருவப் படத்தை மாமன்ற உறுப்பினா் மஞ்சுளா ரசித்கான், கண்ணகியின் உருவப் படத்தை அன்பானந்தன், ஜான் டைலா் உருவப் படத்தை மாமன்ற உறுப்பினா் டி.ஜெயபால் ஆகியோா் திறந்து வைக்கின்றனா். அனந்த கிருஷ்ணன் தலைமையில் தீபம் எம்.சுப்பிரமணியம், கமல் முனிசாமி முன்னிலையில் அம்பேத்காா் விருது துரை ராஜேந்திரன், மெய்யழகன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. சிலப்பதிகார விருது பி.இ.எம்.எல். நகா் தா.அன்பழகனுக்கும், ஜான் டைலா் விருது தாடி அன்பழகனுக்கும் வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், பேராசிரியா் கிருஷ்ணகுமாா், டாக்டா் பிரபு ராம், ஆா்.வி.குமாா், நா.சு.மணி, நாத்திகம் ஸ்ரீதா், கலை.அன்பரசன், கருணாகரன், திருமுருகன் ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.