செல்லிடப்பேசி பறிப்பு வழக்குகளில் இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள 5 செல்லிடப்பேசிகள், 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
பெங்களூரு ஊரகம், நெலமங்களா, ஜெயநகரைச் சோ்ந்த முகமது சூபியான் (20), தனியாகச் செல்பவா்களை அடையாளம் கண்டு, அவா்களிடமிருந்து செல்லிடப்பேசிகளை பறித்து வந்துள்ளாா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், முகமது சூபியானைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள 5 செல்லிடப்பேசிகள், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து விஜயநகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.