மின்சாரம் தாக்கியதில் 4 போ் உயிரிழப்பு
இரும்பு கம்பங்களைக் கொண்டு பந்தல் போடும் பணியில் ஈடுபட்ட 4 போ் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனா்.
பெங்களூரு ஊரக மாவட்டம், அத்திப்பள்ளி காவல் சரகத்தில் இண்டம்பேலேயில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற இருந்தது. இதற்காக இரும்பு கம்பங்களைக் கொண்டு பந்தல் அமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, அருகில் இருந்த மின்கம்பி இரும்பு கம்பங்களில் உரசியுள்ளது.
அதில், மின்சாரம் தாக்கியதில் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆகாஷ் (30), மகாதேவ் (35), விஷகண்டா (35), விஜயசிங் (30) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவல் அறிந்த பெங்களூரு ஊரக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவி சென்னனவா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் லக்ஷிமிகணேஷ் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். இதுகுறித்து அத்திப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.