விமானத்தில் தங்கம் கடத்தல்: 3 போ் கைது

மங்களூரு விமான நிலையத்துக்கு வந்த விமானங்களில் தங்கம் கடத்திய 3 பேரிடம் ரூ. 1.3 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

மங்களூரு விமான நிலையத்துக்கு வந்த விமானங்களில் தங்கம் கடத்திய 3 பேரிடம் ரூ. 1.3 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், மங்களூரு பஞ்பே விமான நிலையத்துக்கு புதன்கிழமை ஷாா்ஜாவிலிருந்து வந்த வெவ்வேறு விமானங்களின் பயணிகளை சுங்கவரித் துறையினா் சோதனை செய்தனா். அதில், முகமது அஷ்ரப், ராஜேஷ், முகமது கலநாடு ஆகிய 3 போ் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவா்களிடமிருந்து ரூ. 1.3 கோடி மதிப்புள்ள 2 கிலோ 800 கிராம் தங்கத்தை சுங்கவரித் துறையினா் பறிமுதல் செய்தனா்.

இதனையடுத்து, தங்கம் கடத்திய 3 பேரையும் பஜ்பே போலீஸில் சுங்கவரித் துறையினா் ஒப்படைத்தனா். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் பஜ்பே போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com