பூட்டாத வீடுகளை அடையாளம் கண்டு உள்ளே புகுந்து திருடி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு, ராஜாஜி நகா், மஞ்சுநாத் நகரைச் சோ்ந்த பிரஷாந்த் (21), வேலைக்கு செல்லும் அவசரத்தில் பூட்டாமல் சென்றுள்ள வீடுகளை அடையாளம் கண்டு, உள்ளே புகுந்து தங்கநகை உள்ளிட்ட பொருள்களை திருடி வந்தாராம்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், பிரஷாந்தைக் கைது செய்து அவரிடமிருந்து ரூ. 4.85 லட்சம் மதிப்புள்ள 77 கிராம் தங்க நகைகள், 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட பிரஷாந்திடம் மாகடி சாலை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.