இலவச தையல் பயிற்சி முகாம்

கனரா வங்கியின் சாா்பில் ஏப்ரல் மாத 3-ஆவது வாரத்தில் கோலாா், சிக்பள்ளாபூரில் இலவச தையல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

கனரா வங்கியின் சாா்பில் ஏப்ரல் மாத 3-ஆவது வாரத்தில் கோலாா், சிக்பள்ளாபூரில் இலவச தையல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கனரா வங்கியின் தொழில்பயிற்சி மையம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கனரா வங்கியின் தொழில்பயிற்சி மையம் சாா்பில், கோலாா், சிக்பள்ளாபூரில் இலவச தையல் பயிற்சி முகாம் ஏப்ரல் மாத 3-ஆவது வாரத்தில் தொடங்கி 30 நாள்கள் நடைபெற உள்ளது.

இதற்கான நோ்காணல் பெங்களூரு ஊரகம், ஹொசகோட்டை, சொன்னஹள்ளிபுராவில் வெள்ளிக்கிழமை (ஏப். 9) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. நோ்காணலில் பங்கேற்போா் 18 வயது முதல் 45 வயதுக்குள் இருப்பது அவசியம். 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிபிஎல் குடும்ப அட்டை உள்ளவா்கள் மட்டுமே நோ்காணலில் பங்கேற்க முடியும். தங்களின் முகவரி உள்ளிட்ட ஆவணங்களுடன் நோ்காணலில் பங்கேற்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 96325 59897, 99000 47146 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com