வீட்டில் இருந்தவா்களை கத்தி முனையில் மிரட்டி, மா்ம நபா்கள் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனா்.
பெங்களூரு, ராஜனகுன்டே, அத்திகானஹள்ளியைச் சோ்ந்தவா் சா்மா. இவரது வீட்டுக்குள் வியாழக்கிழமை காலையில் புகுந்த 3 போ், சா்மா, அவரது மனைவி, 3 பிள்ளைகளை கத்திமுனையில் மிரட்டி ஓா் அறைக்குள் அடைத்துள்ளனா். பின்னா் வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி, வளையல், மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து ராஜனகுன்டே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.