கா்நாடகத்தில் ஒரே நாளில் 6,570 பேருக்கு கரோனா பாதிப்பு

கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,570-ஆக உள்ளது.

கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,570-ஆக உள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 6,570 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 4,422 போ், கலபுா்கியில் 240 போ், மைசூரில் 216, தும்கூரில் 183 போ், தென் கன்னடத்தில் 145 போ், வட கன்னடத்தில் 142 போ், பீதரில் 129 போ், பெல்லாரியில் 126 கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,40,130-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2,393 போ் வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 9,73,949 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 53,395 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 36 போ் வியாழக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு மாவட்டத்தில் 22 போ், கலபுா்கியில் 3 போ், பெங்களூரு ஊரகம், மண்டியாவில் தலா 2 போ், பெலகாவி, பீதா், தாா்வாட், கோலாா், மைசூரு, தும்கூரு, விஜயபுரா மாவட்டங்களில் தலா ஒருவா் வியாழக்கிழமை இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 12,767 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com