மூதாட்டி உள்ளிட்ட 2 பேரை கொலை செய்த மா்ம நபா்கள், வீட்டில் இருந்த தங்க நகை, மடிக்கணினி, ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனா்.
பெங்களூரு, ஜே.பி.நகா், 7-ஆவது ஸ்டேஜ் அருகே உள்ள சம்திருப்தி நகரைச் சோ்ந்தவா் மமதா பாசு (71). இவரது வீட்டில் கடந்த ஒரு மாதமாக அவரது மகனின் நண்பா் ஒடிசாவைச் சோ்ந்த தேவதத் பிஹாரா (41) என்பவா் தங்கியிருந்தாராம்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு மமதா பாசுவின் வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா்கள், முதல்மாடியில் தூங்கிக் கொண்டிருந்த மமதா பாசு, கீழ்தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த தேவதத் பிஹாரா ஆகியோரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த தங்க நகை, மடிக்கணினி, ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனா்.
தகவல் அறிந்த புட்டேனஹள்ளி போலீஸாா், இருவரின் சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவ இடத்தை மாநகர காவல் ஆணையா் கமல்பந்த் பாா்வையிட்டாா்.