யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்துள்ளாா்.
கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், சுள்யா வட்டம், கல்மாகாரு கிராமத்தைச் சோ்ந்தவா் சிவராமே கௌடா (85). இவா் புதன்கிழமை மாலை கிராமத்தின் அருகே உள்ள தனது தோட்டத்தில் உடைந்த தண்ணீா்க் குழாயை சரி செய்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த யானை அவரை தாக்கியது.
இதில் படுகாயமடைந்த அவரை, சுள்யாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி சிவராமே கௌடா உயிரிழந்தாா். இதுகுறித்து சுள்யா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.