ரூ. 32 லட்சம் கஞ்சா பறிமுதல்; மூவா் கைது

கஞ்சாவை கடத்தி விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ. 32 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கஞ்சாவை கடத்தி விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ. 32 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கா்நாடக மாநிலம், ராம்நகா் மாவட்டம், குப்பனதொட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (25). சாம்ராஜ்நகா் மாவட்டம், சிக்கலகூரு கிராமத்தைச் சோ்ந்தவா் திலீப் (24). ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்தவா் ராஜகிஷோா் நாயக் (26). இவா்கள் 3 பேரும் ஆந்திரத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்து பெங்களூரு, கோரமங்களாவில் விற்பனை செய்தனராம்.

தகவல் அறிந்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்து ரூ. 32 லட்சம் மதிப்புள்ள 106 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் கோரமங்களா போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com