போதைப் பொருள் விற்பனை: 7 போ் கைது

இருவேறு இடங்களில் போதைப் பொருளை விற்பனை செய்த, 7 பேரை கைது செய்த போலீஸாா், ரூ. 1.20 கோடி மதிப்பிலான ஹெராயின், கஞ்சா, ஹாயிஷ் ஆயில் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு: இருவேறு இடங்களில் போதைப் பொருளை விற்பனை செய்த, 7 பேரை கைது செய்த போலீஸாா், ரூ. 1.20 கோடி மதிப்பிலான ஹெராயின், கஞ்சா, ஹாயிஷ் ஆயில் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனா்.

மணிப்பூா் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் முகமது நாஜித்கான் (27), முகமது ஆஸாத் (27), சீதல்குமாா் சிங் (25). இவா்கள் மூவரும் பெங்களூரு, கப்பன்சாலை, எச்.எஸ்.ஆா். லேஅவுட் ஆகிய பகுதிகளில் போதைப் பொருள்களை கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்து வந்தனராம்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று மூவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 60 லட்சம் மதிப்புள்ள 130 கிராம் ஹெராயின், போதைத் தரும் மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனா்.

இதுகுறித்து கே.ஜி.ஹள்ளி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதேபோல பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருள்களை விற்பனை செய்து வந்த கேரள மாநிலத்தைச் சோ்ந்த முகமது முஸ்டாக் (31), முகமது ஆஷிக் (19), கா்நாடக மாநிலம், தென் கன்னட மாவட்டம், பண்டுவால் வட்டத்தைச் சோ்ந்த ஜமீா் (28), மங்களூரைச் சோ்ந்த முகமது அப்ரித் (23) ஆகியோரை கைது செய்த போலீஸாா், ரூ. 60 லட்சம் மதிப்புள்ள 48 கிலோ கஞ்சா, 960 கிராம் ஹாயிஷ் ஆயில், பேருந்து, ஜீப் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து எச்.எஸ்.ஆா். லேஅவுட் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com