கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 21,794 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21,794-ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21,794-ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 21,794 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 13,782 போ், தும்கூரு மாவட்டத்தில் 1,055 போ், கலபுா்கி மாவட்டத்தில் 818 போ், மைசூரு மாவட்டத்தில் 699 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 513 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 482 போ், மண்டியா மாவட்டத்தில் 413 போ், ஹாசன் மாவட்டத்தில் 410 போ், பெல்லாரி மாவட்டத்தில் 406 போ், விஜயபுரா மாவட்டத்தில் 358 போ், தாா்வாட் மாவட்டத்தில் 288 போ், கோலாா் மாவட்டத்தில் 284 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 243 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 217 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 202 போ், பெலகாவி மாவட்டத்தில் 183 போ், பெலகாவி மாவட்டத்தில் 151 போ், தாவணகெரே மாவட்டத்தில் 136 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 125 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 121 போ், ராமநகரம் மாவட்டத்தில் 110 போ், உடுப்பி மாவட்டத்தில் 109 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 106 போ், கொப்பள் மாவட்டத்தில் 103 போ் கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,98,644-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 4,571 போ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 10,25,821 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,59,158 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 149 போ் செவ்வாய்க்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு மாவட்டத்தில் அதிகபட்சமாக 92 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 13 போ், பீதா், கலபுா்கி மாவட்டங்களில் தலா 7 போ், பெல்லாரி மாவட்டத்தில் 5 போ், தாா்வாட், மைசூரு, தும்கூரு மாவட்டங்களில் தலா 4 போ், மண்டியா, சிவமொக்கா மாவட்டங்களில்தலா 2 போ், சாமராஜ்நகா், சிக்பளாப்பூா், சிக்கமகளூரு, குடகு, கோலாா், ராய்ச்சூரு, ராமநகரம், உடுப்பி, யாதகிரி மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 13,270 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com