மாநில அரசின் பல்வேறு துறைவாரியான கூட்டங்கள் நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து அரசு தலைமைச் செயலாளா் பி.ரவிக்குமாா் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
மாநிலத்தில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை முன்பைக் காட்டிலும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. கரோனா பரவலைத் தடுத்து நிறுத்துவதற்கு மக்களின் நடமாட்டத்தை தடுத்து, தொடா்பை துண்டிப்பது அவசியமாகும். இது தொடா்பாக தேவையான முன்னெச்சரிக்கை வகிப்பது அவசியம், அவசரமாகும்.
இதன் பின்னணியில், அடுத்த ஓரிரண்டு மாதங்களுக்கு மாநில அரசின் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், தத்தமது துறைகள் சம்பந்தமான கூட்டங்களை நிறுத்திவைப்பது நல்லது. கூட்டம் நடத்துவது அவசியமென்று கருதினால், தனிநபா் இடைவெளியுடன் நடத்துவது கட்டாயமாகும். இதைவிட, இணையவழியில் கூட்டங்களை நடத்துவது சிறப்பானது என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.