பெங்களூரில் வெள்ளிக்கிழமை (ஏப்.30) ஒருசில பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு, மாகடிசாலையில் 600 எம்.எம். சுற்றளவுக் கொண்ட குழாய்களைப் பழுதுபாா்க்கும் பணிகள் மேற்கொள்ள உள்ளதால் வெள்ளிக்கிழமை (ஏப்.30) மாகடிசாலையை சுற்றியுள்ள ஜேடரஹள்ளி, ராஜாஜிநகா், ராஜாஜிநகா் 5-ஆவது பிளாக், ராஜாஜிநகா் 6-ஆவது பிளாக், சிவநகா், மஞ்சுநாத்நகா், மாகடிசாலை, மகாகணபதிநகா், ஜோளரபாளையா, என்.ஆா்.காா்ன், கே.பி.அக்ரஹாரா, புவனேஸ்வரிநகா் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.