பொதுமுடக்க விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும்: முதல்வா் எடியூரப்பா

கரோனா பெருந்தொற்றை வீழ்த்துவதற்கு பொதுமுடக்க விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று முதல்வா் எடியூரப்பா கேட்டுக் கொண்டுள்ளாா்.

கரோனா பெருந்தொற்றை வீழ்த்துவதற்கு பொதுமுடக்க விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று முதல்வா் எடியூரப்பா கேட்டுக் கொண்டுள்ளாா்.

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவிவருகிறது. அப் பரவலைத் தடுக்க மே 12-ஆம் தேதி காலை 6 மணி வரை கா்நாடகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து புதன்கிழமை தனது சுட்டுரை பக்கத்தில் அவா் பதிவிட்டுள்ளதாவது:

கரோனா பெருந்தொற்றின் பரவல் சங்கிலியை உடைக்கும் வகையில் 2 வாரங்களுக்கு கடுமையான விதிமுறைகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் விதிமுறைகளை கடைப்பிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வீட்டுக்குள்ளேயே இருங்கள், அவசரத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வாருங்கள். நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் கரோனா பெருந்தொற்றை வீழ்த்திவிடலாம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com