விதி மீறிய 1,707 வாகனங்கள் பறிமுதல்

பொது முடக்க விதிகளை மீறியதாக வியாழக்கிழமை 1,707 வாகன உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

பொது முடக்க விதிகளை மீறியதாக வியாழக்கிழமை 1,707 வாகன உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஏப். 28ஆம் தேதி முதல் மே 12-ஆம் தேதி வரை பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்துப் பகுதியிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அவசரத் தேவைகளைத் தவிர வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை பொருள்படுத்தாமல் தடையை மீறி வாகனங்களில் சென்றவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 1,530 இருசக்கர வாகனங்கள், 80 மூன்று சக்கர வாகனங்கள், 97 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,707 வாகனங்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இத்தகவலை பெங்களூரு மாநகரக் காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com