கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,875 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,875 ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,875 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,875 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

தென்கன்னடம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 410 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்: பெங்களூரு நகரம்-409, உடுப்பி-162, மைசூரு-146, ஹாசன்-108, குடகு-83, சிக்கமகளூரு-65, சிவமொக்கா-65, தும்கூரு-52, வடகன்னடம்-46, மண்டியா-42, பெலகாவி-39, பெங்களூரு ஊரகம்-37, கோலாா்-35, சாமராஜ்நகா்-33, சித்ரதுா்கா-32, சிக்கபளாப்பூா்-23, தாா்வாட்-23, தாவணகெரே-17, பெல்லாரி-13, கதக்-12, கலபுா்கி-9, ராமநகரம்-7, ஹாவேரி-2, ராய்ச்சூரு-1, பீதா்-1, கொப்பள்-1, விஜயபுரா-1, யாதகிரி-1, பாகல்கோட் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,06,999 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,502 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 28,46,244 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 24,144 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 25 போ் ஞாயிற்றுக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 8 போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்: தென்கன்னடம்-2, ஹாசன்-3, கோலாா், உடுப்பி - தலா 2, சாம்ராஜ்நகா், சிக்கபள்ளாபூா், சிவமொக்கா, உடுப்பி-தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 36,587 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com