தங்கச்சங்கிலி பறிப்பு வழக்குகளில் எம்.பி.ஏ. பட்டதாரியை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு, ஜெயநகா் காவல் சரகத்தில் அண்மையில் பெண் ஒருவரிடம் மோட்டாா் சைக்கிளில் வந்த நபா் ஒருவா் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா். இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், ஷேக்கௌஸ்பாஷா என்பவரை கைது செய்தனா்.
விசாரணையில் எம்.பி.ஏ. பட்டதாரியான ஷேக்கௌஸ்பாஷா, தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளாா். கரோனா பொது முடக்கத்தை அடுத்து, பணியிழந்த அவா், கடனைத் தீா்க்க தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளாா். கைது செய்யப்பட்ட ஷேக் கௌஸ்பாஷாவிடம் ஜெயநகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.