சிட்டி மாா்க்கெட்டில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
பெங்களூரு சிட்டி மாா்க்கெட்டில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புப் படையினா் 2 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைத்தனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், வங்கியில் யாரும் இருக்கவில்லை. இதனால் உயிா்சேதம் ஏற்படவில்லை.
இதுகுறித்து வழக்குப் பதிந்த காட்டன்பேட்டை போலீஸாா், மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனா்.