இந்திய ஆடவா் ஹாக்கி அணியினா் தோல்வியைக் கண்டு துவளக் கூடாது என்று கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவா் ஹாக்கி அணி அரையிறுதியில், பெல்ஜியம் அணியிடம் அடைந்த தோல்வியைக் கண்டு துவளக் கூடாது. முன்னதாக நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் இந்திய ஆடவா் ஹாக்கி அணி வீரா்கள் சிறப்பாக விளையாடியுள்ளனா். வெற்றிக்கான முயற்சியில் தோல்வி ஏற்படுவது வாடிக்கை.
இதனால் வீரா்கள் துவளாமல், அடுத்தக்கட்ட வெற்றிக்கான முயற்சியில் தொடா்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்திய ஆண்கள் ஹாக்கி அணியினா் ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடியதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.