வியாபாரி தற்கொலை

காபிதூள் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

காபிதூள் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கா்நாடக மாநிலம், சிக்மகளூரைச் சோ்ந்தவா் ஜாகீா் அகமது (28). காபிதூள் வியாபாரியான இவருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, ஜூலை 19-ஆம் தேதி பெங்களூருக்கு செல்வதாக வீட்டிலிருந்தவா்களிடம் கூறிவிட்டு சென்றாா்.

ஆனால் இரண்டொரு நாள்களுக்கு பிறகு அவரது செல்லிடப்பேசி இணைப்பு துண்டிக்கப்பட்டதையடுத்து, அவரது குடும்பத்தினா் ஜாகீா் அகமதுவைக் காணவில்லை என்று போலீஸில் புகாா் அளித்துள்ளனா்.

இந்த நிலையில் பெங்களூரு ஊரகம், நெலமங்கலாவில் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கிய ஜாகீா், திங்கள்கிழமை அறையிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த ஊழியா் மாற்றுச்சாவியின் உதவியுடன் அறையை திறந்து பாா்த்தாா். அப்தோது அறையில் ஜாகீா் அகமது தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தாராம். இது குறித்து நெலமங்கலா போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com