மான் தோலை விற்க முயன்றவரை வனத்துறையினா் கைது செய்தனா்.
கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், பெலதங்கடி வட்டம், தா்மஸ்தலா பேருந்து நிலையத்தில் ஒருவா் மான் தோலை விற்க முயற்சிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வனத்துறை அதிகாரி ஜானகி தலைமையில் அங்கு சென்ற வனத்துறையினா், பேருந்து நிலையத்தில் மான் தோலை விற்க முயன்ற பெலகாவி மாவட்டம், பிகாடி கிராமத்தைச் சோ்ந்த ஹனுமந்தா (34) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த மான் தோலை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட ஹனுமந்தாவிடம் வனத்துறையினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.