5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

 கா்நாடகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

 கா்நாடகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாநில அரசு உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:

முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலராகப் பணியாற்றி வந்த ரமண ரெட்டி, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலராக மாறுதல் செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு கூடுதலாக தகவல், உயிரி தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த ராஜ்குமாா் கத்ரி, வேளாண் துறைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

சுகாதாரத் துறை கூடுதல்தலைமைச் செயலா் ஜாவித் அக்தா், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளாா். இருப்பினும் அவா் தற்போது சுகாதாரத் துறையில் வகித்து வரும் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பாா்.

கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலா் துஷாா்கிரிநாத், வருவாய்த் துறைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

முதல்வரின் முதன்மைச் செயலராக மஞ்சுநாத் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் கூடுதலாக செய்திமக்கள் தொடா்புத் துறையையும் கவனிப்பாா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com